சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

பயிற்சி மற்றும் விழிப்புணர்வு

எதிர்காலத்தில் தொழில் நிமிர்த்தம் வெளிநாடு செல்லவுள்ள மாணவர்களுக்கு HIV/AIDS விழிப்புணர்வு கருத்தரங்கு

SWOAD நிறுவனமானது CDS நிறுவனத்தின் உதவியுடன் வெளிநாடு செல்லவிருக்கின்ற தொழில் பயிற்சியை தொடர்கின்ற மாணவர்களுக்கு HIV/AIDS தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த 16.011.2023ம் திகதி நடாத்தப்பட்டது. இக்கருத்தரங்கானது காரைதீவு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் பயிற்சியை தொடர்கின்ற 40மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு கருத்தரங்கை பயிற்சி பெற்ற வளதாரிகளான க.பிறேமலதன் மற்றும் ஆனந்தராசா அவர்களினால் நடாத்தப்பட்டது.
மேலும் படிக்க

வெளிநாட்டில் தொழில் திறன் மற்றும் வாய்ப்புகளைத் தேடும் குடும்பங்களுக்கான பயிற்சி

தொழில்திறன்களைப் பெற்று வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து மீளத்திரும்பிய தொழிலாளர்களுக்கு தொழில் திறன்கள் தொடர்பான வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கும் நோக்குடன் தொழில்திறன் அபிவிருத்தி செயல்திட்டத்தின் கீழ் தொழில்துறை பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பதாரிகளில் பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்வதற்கான Pre Counseling ஆனது 395 பேருக்கு மேற்கொள்ளப்பட்டு இதில் 255 பேர் பொருத்தமான பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு இவர்களில் 119 பேர் பயிற்சிக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். 
மேலும் படிக்க

அரச தொழில் பயிற்சி ஆலோசகர்கள், மற்றும்தொடர்புடைய பங்குதாரர்கள், திட்ட பணியாளர்களுடனான கலந்துரையாடல்

இத்திட்டச் செயற்பாடுகள் குறித்து அரச தொழில் பயிற்சி ஆலோசகர்கள், மற்றும்தொடர்புடைய பங்குதாரர்கள், திட்ட பணியாளர்களுடனான 4 கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு இதில் அவர்களது பங்கேற்புடனான செயற்பாடுகள் குறித்த தகவல் வழங்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டு இத்திட்டச்செயற்பாட்டில் அவர்களது பங்களிப்புக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன
மேலும் படிக்க

தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் செயல்முறைகள் பற்றிய உணர்வூட்டல் விவாதம்

தொழில் திறன் அபிவிருத்தி செயற்திட்டத்தின் செயல்முறைகள் குறித்து உணர்வூட்டல் கலந்துரையாடலானது (ளுநளெவைணைiபெ) கிராமிய மட்ட அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் கிராம மட்ட அரச அதிகாரிகள் 551 பேரை உள்ளிணைத்து 17 கலந்துரையாடல்களும்,தொண்டர்கள் 90பேரை உள்ளிணைத்து 3 கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டுள்ளன
மேலும் படிக்க

“ போதைப்பொருள் பாவனையும் அதனால் ஏற்படக்கூடிய தீமைகளும்” தொடர்பான விழிப்புணர்வு.

20.08.2019ம் திகதி பொத்துவில் பிரதேசத்தில் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ஆ.ஆ.சுக்கூர் அவர்களைக் கொண்டு போதைப்பொருள் பாவனையும் அதனால் ஏற்படக்கூடிய தீமைகளும் தொடர்பாக 33 பேருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

வங்கி நடைமுறை தொடர்பான வழிப்புணர்வு’

17,20,24.08.2019 ஆகிய திகதிகளில் காரைதீவு பிரதேசத்தில் HNB வங்கி ஊழியர் திருமதி.யாழினி அவர்களைக் கொண்டு வங்கி நடைமுறைகள், வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக 3 விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடாத்தப்பட்டுள்ளன. இதில் 123பேர் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க

“ மாணவர்களின் திறனை விருத்தி செய்வதில் பெற்றோரின்பங்களிப்பு” தொடர்பான விழிப்புணர்வு.

26.08.2019ம் திகதி கல்முனை பிரதேசத்தில் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.யு.ஆ.பஸ்லீன் அவர்களைக் கொண்டு 35 பேருக்கு மாணவர்களின் திறனை விருத்தி செய்வதில் பெற்றோரின் பங்களிப்பு தொடர்பானவிழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நடாத்தப்பட்டது
மேலும் படிக்க

“ சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வியாபாரத் திட்டமிடல்” தொடர்பான விழிப்புணர்வு.

10,07.2019ம் திகதி பொத்துவில் பிரதேச குண்டுமடு கிளையில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி- ஜீவதர்சினி கருணாகரன் அவர்களைக் கொண்டு சுயதொழில் முயற்சியாளர்கள் 31 பேருக்கு வியாபாரத்திட்டமிடல் தொடர்பானவிழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

28.7.20219 அன்று “குழந்தைகள் பாதுகாப்பு” பற்றிய விழிப்புணர்வு

28.07.2019ம் திகதி காரைதீவு பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கலாச்சார உத்தியோகத்தர் திருமதி.ச.சிவலோஜினி அவர்களைக் கொண்டு ஆதிசிவன் அறநெறி பாடசாலை மாணவர்கள் 35 பேருக்கும், விஸ்ணு அறநெறி பாடசாலை மாணவர்கள் 45 பேருக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

22.07.2019 அன்று குழந்தை பராமரிப்பு உளவியல் ஆலோசனைக்கான வழிகாட்டுதல்

பிள்ளை பராமரிப்பின்போது பெற்றோர்களின் கோபம், மற்றும் செயற்பாடுகள் காரணமாக பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய உளநலப் பாதிப்புக்கள் குறித்து உளநல ஆலோசகர் திருமதியு.சு.பௌமியாஅவர்களைக்கொண்டு 22.07.2019ம ; திகதி கல்முனைப் பிரதேசத்தில் பெரியநீலாவணை கிளையில் 25பேருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க