சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

அனுபவங்கள் மற்றும் கொள்தகுதிறன்

  • முகப்பு
  • அனுபவங்கள் மற்றும் கொள்தகுதிறன்

ஆலையடிவேம்பு விவசாயிகளுடனான கலந்துரையாடல்

SWOAD நிறுவனமானது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதனை உரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 21.01.2024ம் திகதி சுவாட் நிறுவனத்தின் அக்கரைப்பற்றில் உள்ள தலைமையலுவலகத்தில் அந்நிறுவனத்தின் ஸ்தாபகரும். இணைப்பாளருமான திரு.எஸ்.செந்துராசா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது இதன்படி இக்கூட்டத்தில் தற்போது விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. மேலும் இக்கலந்துரையாடலுக்கு விவசாய அமைப்புக்களின் தலைவர்கள், நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் சுவாட்…
மேலும் படிக்க

அம்பாறை மாவட்ட பேண்தகு உட்கட்டுமான மக்கள் மன்றத்தின் 1வது நிருவாகசபையின் கலந்துரையாடல் கூட்டம்

SWOAD நிறுவனம் மற்றும் ASI நிறுவனமும் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்ற அம்பாறை மாவட்ட பேண்தகு உட்கட்டுமானத்திற்கான மக்கள் மன்றத்தின் 1வது நிருவாக கூட்டமானது கடந்த 02.01.2024ம் திகதி சுவாட் நிறுவனத்தின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு.எஸ்.செந்துராசா அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று சுவாட் தலைமை அலுவலகத்தில் நடாத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் குறிப்பாக மக்கள் மன்றத்தில் எதிர்கால செயற்பாடுகள், உறுப்பினர்கள் கடமைகள், பொறுப்புக்கள் அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கட்டப்பட்ட உட்கட்டுமானங்களின் பயன்பாடுகள்…
மேலும் படிக்க

நீடித்து நிலைத்திருக்கும் நிர்மாண கட்டமைப்பு தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடலும், மக்கள் மன்றத்தை உருவாக்குதலும்

SWOAD அமைப்பானது பேண்தகு உட்கட்டமைப்புக்கான அணி (ASI) நிறுவனத்தின் நிதி உதவியுடன் அம்பாறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற உட்கட்டுமானப்பணிகள் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களுக்கு சிறந்த நல்வாழ்வை உருவாக்கும் நோக்குடன் வினைத்திறனான சமூக செயற்பாட்டுக் குழுவொன்றை மாவட்ட மட்டத்தில் உருவாக்கி அதனூடாக மக்களின் தேவைகள், விருப்பங்களை கருத்திற் கொண்டு நிர்மாணப்பணிகளின் பொதுபணச் செலவுகள் சரியான முன்னெடுக்கப்படுவதையும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்யும் முகமாக இன்று அதாவது 28.12.2023ம் திகதி…
மேலும் படிக்க

சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் 2023

18.12.2023 ம் திகதி VOM (Voice of Migration) ஏற்பாட்டில் கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் புலம்பெயர் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் விசேட அதிதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ Manusha Nanayakkara மற்றும் SDC, Helvetas, Solitaries போன்ற நிதி நிறுவன பிரதிநிதிகளும், ஏனைய சிவில் அமைப்புக்களும் பங்குபற்றியிருந்தனர். இதில் சுவாட் அமைப்பின் சார்பில் திரு.ச. ஆனந்தராசா மற்றும் சம்மாந்துறை, இறக்காமம் புலம்பெயர் சங்கத்தலைவிகளும் பங்குபற்றியிருந்தனர்.
மேலும் படிக்க

அனுபவங்கங்களை கற்றுக் கொள்ளும் முகமாக நுவரெலியா மாவட்டத்தில் பணிபுரிகின்ற PREDO நிறுவனத்தினர் கள விஐயம்

SWOAD நிறுவனத்தின் கீழ் இயங்கிவருகின்ற புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் செயற்பாடுகள் மற்றும் அவர்களின் அனுபவங்களை கற்றுக் கொள்ளும் முகமாக ஹற்றன் நுவரேலியா மாவட்டத்தில் பணிபுரிகின்ற PREDO நிறுவனத்தின் புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் கடந்த 02.12.2023ம் திகதி சம்மாந்துறைப்பிரதேசத்தில் கள விஐயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். சுவாட் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் க.பிறேமலதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் குறிப்பாக சுவாட் நிறுவனத்தின் புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் செயற்பாடுகள் ,…
மேலும் படிக்க

திட்ட விரிவாக்கம் பற்றி விவாதிக்க ASI ஒருங்கிணைப்பாளர் WORD க்கு வருகை தந்தார்

இலங்கையில் நிலையான நிர்மாணக் கட்டமைப்பை உருவாக்கும் அலையன்ஸ் ஃபார் சஸ்டைனபிள் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (ஏஎஸ்ஐ) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.சமந்த அபேவிக்ரம அவர்கள் இன்று 21.11.2023 அன்று SWOAD க்கு விஜயம் செய்து இந்தக் கட்டமைப்பின் விரிவாக்கம் குறித்து விவாதித்தார். இந்நிகழ்வில், SWOAD அமைப்பின் ஸ்தாபகர் திரு.எஸ்.செந்துராசா, நிர்வாக சபை உறுப்பினர்கள், தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி எஸ்.அனுசியா, திருக்கோவில் வலய ஓய்வுபெற்ற மேலதிக கல்விப் பணிப்பாளர் கே.கமலதேவி, தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்…
மேலும் படிக்க

எதிர்காலத்தில் தொழில் நிமிர்த்தம் வெளிநாடு செல்லவுள்ள மாணவர்களுக்கு HIV/AIDS விழிப்புணர்வு கருத்தரங்கு

SWOAD நிறுவனமானது CDS நிறுவனத்தின் உதவியுடன் வெளிநாடு செல்லவிருக்கின்ற தொழில் பயிற்சியை தொடர்கின்ற மாணவர்களுக்கு HIV/AIDS தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த 16.011.2023ம் திகதி நடாத்தப்பட்டது. இக்கருத்தரங்கானது காரைதீவு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் பயிற்சியை தொடர்கின்ற 40மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு கருத்தரங்கை பயிற்சி பெற்ற வளதாரிகளான க.பிறேமலதன் மற்றும் ஆனந்தராசா அவர்களினால் நடாத்தப்பட்டது.
மேலும் படிக்க

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் 3 மீளாய்வுக் கலந்துரையாடல்கள்

இத்திட்டத்தின் ஊடாக திட்ட செயற்பாட்டு பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர் நலன்புரிச்சங்கங்களின் நோக்கம் குறித்தும், இச்சங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை தெளிவுபடுத்தி எதிர்வரும் காலங்களில் இச் சங்கங ;களுடன் இணைந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்எவ்வாறு செயலாற்றுவது சேவையினை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்துவது, இதிலுள்ள சாதக,பாதகங்கள் குறித்தும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் 3 மீளாய்வுக் கலந்துரையாடல்கள் DOFE Coordinator A.M.Farzan…
மேலும் படிக்க

பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு தகவல்கள் குறித்த விழிப்புணர்வு

பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு தகவல்கள் குறித்தவிழிப்புணர்வை கிராம மக்களுக்கு வழங்கும் நோக்கில்இத்திட்டச் செயற்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 105 தொண்டர்களுக்கு அவர்களுக்குத் தேவையான 4 நாள் கொண்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

பிரச்சனைகளைத் தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபட சங்க நிர்வாகிகளுக்கான பயிற்சி

புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு இச்சக்கத்தின் ஊடாக தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு பாதுகாப்பான முறையில் வெளிநாடு செல்லல் தொடர்பான தகவல்களை வழங்குதல், பாதிக்கப்பட்டோருக்கான சட்ட உதவியளித்தல், உளவள ஆலோசனை வழங்கல், மற்றும் அனுப்பப்படும் நிதியை முகாமைத்துவம் செய்வதற்கு குடும்பத்துடன் மீள இணைந்துகொள்வதற ;குமான வழிகாட்டுதல் போன்ற செயற்பாடுகள் மேற்கொள்வதற்கும் 30 சங்கங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 350 பேரை உள்ளினைத்து 16 பயிற்சிகள் நடாத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்க