சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

நிதி வழங்குனரின் நிகழ்ச்சித்திட்டங்கள்

எதிர்காலத்தில் தொழில் நிமிர்த்தம் வெளிநாடு செல்லவுள்ள மாணவர்களுக்கு HIV/AIDS விழிப்புணர்வு கருத்தரங்கு

SWOAD நிறுவனமானது CDS நிறுவனத்தின் உதவியுடன் வெளிநாடு செல்லவிருக்கின்ற தொழில் பயிற்சியை தொடர்கின்ற மாணவர்களுக்கு HIV/AIDS தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த 16.011.2023ம் திகதி நடாத்தப்பட்டது. இக்கருத்தரங்கானது காரைதீவு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் பயிற்சியை தொடர்கின்ற 40மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு கருத்தரங்கை பயிற்சி பெற்ற வளதாரிகளான க.பிறேமலதன் மற்றும் ஆனந்தராசா அவர்களினால் நடாத்தப்பட்டது.
மேலும் படிக்க

HIV/AIDS தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு.

Community Development Services ( CDS ) நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் SWOAD அமைப்பின் ஊடாக புலம்பெயர் தொழிலாளர் சங்கத்தலைவர்களுக்கு HIV/AIDS பற்றியும் அதன் தொற்றில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கானது SWOAD அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகைமையாளர் திரு.க.பிறேமலதன் மற்றும் உதவி திட்ட முகாமையாளர் திரு.ச.ஆனந்தராசா ஆகியோர் இணைந்து இன்று 09.11.2023ம் திகதி வியாழக்கிழமை சுவாட் அக்கரைப்பற்று தலைமையக பயிற்சி மண்டபத்தில் நடாத்தினர். இதில் 32 புலம்பெயர் தொழிலாளர் சங்கத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

சுவாட்‌ நிறுவனத்தில்‌ தொழில்‌ வாய்ப்பினை ஏற்படுத்திக்‌ கொடுப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும்‌ நிகழ்வு

அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு (SWOAD ) அமைப்பானது கனேடிய உலகப்பல்கலைக்கழக (WUSC ) நிறுவனத்தின்‌ உதவியுடன்‌ அம்பாறை மாவட்டத்தில்‌ இளைஞர்‌. யுவதிகளுக்கு சுற்றுலாத்‌துறையில்‌ உள்ள தொழில்‌ வெற்றிடங்களுக்கு தொழில்‌ பயிற்சி நெறிகளை வழங்கி அதன்‌ ஊடாக (வேலைவாய்ப்பினை சுற்றுலாத்‌ துறைகளில்‌ (Tourism ). பெற்றுக்‌ கொடுக்கும்‌ முகமாக SWOAD நிறுவனம்‌ கனேடிய உலகப்பல்கலைக்கழகம்‌ (WUSC ) மற்றும்‌ அறுகம்பை சுற்றுலாத்துறை சம்மேளனத்துடன்‌ ABTA ஒப்பந்தம்‌ ஒன்றை கைச்சாத்திடும்‌ நிகழ்வு கடந்த 2015-06-24ம்‌ திகதி SWOAD தலைமை […]
மேலும் படிக்க

சாகாமம் பிரதேசத்தில் 240 குடும்பங்களுக்கு குராய் குடிநீர் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

EU-ACAP திட்டத்தின் கீழ் சாகாமம் பிரதேசத்தில் 240 குடும்பங்களுக்கு குலாய் குடிநீர் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

கல்முனை மற்றும் திருக்கோவில் பகுதிகளில் சுயஉதவி குழு பொருட்கள் விற்பனை நிலையம் திறப்பு.

உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும்முகமாக Diakonia திட்டத்தின் கீழ் சுய சார்புக் குழுக்களுடைய உற்பத்திப்பொருட்களின் விற்பனை நிலையமானது கல்முனை, திருக்கோவில் பிரதேசங்களில் 15,16.02.2012ம் திகதி காலை 11.00 மணிக்கு பிரதேச நிர்வாக உத்தியோகத்தர்களின் தலைமையில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

கிராமங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு தெரு நாடகம்.

EU-ACAP திட்டத்தின் கீழ் தாண்டியடி, சிறிவல்லிபுரம், விநாயகபுரம், குடிநிலம் ஆகிய கிராமங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வூட்டும் பொருட்டு வீதி நாடகம் நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

காவல்துறை மகளிர் மேசை அடிக்கல் நாட்டு விழா மற்றும் விநாயகபுரம் கல்வெட்டு நிகழ்வு

EU-ACAP திட்டத்தின் கீழ் 17.10.2012ம் திகதி திருக்கோவில் பொலிஸ் Women desk அடிக்கல் நாட்டல் நிகழ்வும், வினாயகபுரம் கல்வெட்டு திறப்புவிழாவும் நடைபெற்றது.
மேலும் படிக்க

WUSC நாட்டின் இயக்குநரின் வருகை

17.10.2012ம் திகதி WUSC Country Director வருகைதந்து இத்திட்ட செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டு மீளாய்வு செய்யப்பட்டது.
மேலும் படிக்க

வீடியோ ஆவணப்படுத்தல் மூலம் இளைஞர்களின் சமூக-நிலை மாற்றங்களைப் படம்பிடித்தல்.

இளையோர் நிலைமாற்றல் செயல்திட்டத்தினால் சமூகமட்ட இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ளமாற்றங்கள் குறித்த 11.05.2011ம் திகதி கொழும்பு WUSC தலைமை அலுவலகத்திலிருந்து Gender Officer வருகைதந்து Video Document மூலம் தகவல்களை பெற்று ஆய்வினை மேற்கொண்டார்.
மேலும் படிக்க

CA அமைப்பு ஆலையடிவேம்பில் 24 பேருக்கும் கல்முனையில் 42 பேருக்கும் தற்காலிக தங்குமிடங்களை அமைத்துள்ளது.

வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் CA அமைப்பின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 24 பேருக்கும், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 42 பேருக்கும் தற்காலிக கொட்டில் அமைத்துக் கொடுக்கப்பட்டது
மேலும் படிக்க