சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

CA அமைப்பு கல்முனையில் வீட்டுத்தோட்டம் மற்றும் மட்பாண்ட தொழில்துறைக்கு 400,000.00 ரூபாவை வழங்குகிறது.

வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் CA அமைப்பின் அனுசரணையுடன் கல்முனை பிரதேசத்தில் இருந்து வீட்டுத் தோட்டத்திற்காக 50 பயனாளிகளும், மட்பாண்ட கைத்தொழிலுக்காக 15 பயனாளிகளும் தொழிலுக்கான உதவித் தொகையாக 400,000.00 ரூபாய் நிதியானது திட்ட உத்தியோகத்தர் அவர்களின் தலைமையில் இப்பிரதேச செயலாளர் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

Oxfam ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சாலைகளை சுத்தம் செய்வதில் உதவுகிறது

வெள்ள அனர்த்தகால திண்மக்கழிவகற்றல் செயல் திட்டத்தின் கீழ் Oxfam அமைப்பின் நிதி உதவியுடன் 30,600.00 ரூபாய் செலவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோளாவில் – 01,02,03, நாவற்காடு, ஆலையடிவேம்பு, சின்னக்குளம், பெரியகுளம், வாச்சிக்குடா, இத்தியடி, தீவுக்காலை, பனங்காடு ஆகிய பிரிவுகளில் வீதிகள் தோறும் தேங்கியிருந்த திண்மக்கழிவுகளானது ஆலையடிவேம்பு பிரதேச சபையினூடாக அகற்றி சுத்தம் செய்து கொடுக்கப்பட்டது.
மேலும் படிக்க

Oxfam 650 குடும்பங்களுக்கு உணவு அல்லாத பொருட்களையும், 2419 ஹெல்த் பேக்கேஜ்களையும், 1037 வாட்டர் ஃபில்டர்களையும் ஆதரிக்கிறது.

வெள்ள அனர்த்த அவசரகால செயற்திட்டத்தின் கீழ் Oxfam அமைப்பின் நிதி உதவியுடன் ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 650 குடும்பங்களுக்கு உணவு அல்லாத பொருட்களும், 2419 குடும்பங்களுக்கு உடல் சுகாதார மேம்பாட்டிற்கான பொதிகளும், 1037 குடும்பங்களுக்கு தண்ணீர் வடிகட்டி பாத்திரமும் இப்பிரதேச செயலகங்களின் ஊடாக கிராம சேவையாளர் தலைமையில் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

ZOA அமைப்பு திருக்கோவில் பகுதியில் உணவு அல்லாத பொருட்களைக் கொண்ட 1050 குடும்பங்களுக்கு ஆதரவளிக்கிறது

வெள்ள அனர்த்த அவசரகால செயல்திட்ட செயற்பாட்டின் கீழ் ZOA அமைப்பின் அனுசரணையில் திருக்கோவில் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 1050 குடும்பங்களுக்கு உணவு அல்லாத பொருட்களும் (Non food relief items), இப்பிரதேசத்தில் தெரிவு செய்யப் பட்ட 10 பாடசாலைகளுக்கு பாடசாலையை சுத்தம் செய்வதற்கான பொருட்களும் (School Cleaning tools) வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

சாகம கிராமத்தில் 200 புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து சாகாம கிராமத்தில் குடியேறிய மக்களுக்கும், அக் கிராமத்தில் அடிப்படை வசதி குறைந்த மக்களுமாக 200 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு OXFAM அமைப்பின் அனுசரணையில் 358,600.00 ரூபா செலவில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

திருக்கோவில் மற்றும் விநாயகபுரத்தில் உள்ள விவசாயிகளுக்கு களப் பதிவு பணிகளுக்கு உதவி

வாழ்வாதாரத் திட்டத ;தின் கீழ் திருக்கோவில், பொத்துவில் பிரதேச விவசாயிகள் 116 பேருக்கு பிரதேச செயலாளர் ஊடாக வயல், மேட்டுநிலங்களை பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்கான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டதுடன், SOND நிறுவனத்தின் ஊடாக வினாயகபுரம் 01,02,03,04 கிளைகளிலுள்ள 100 விவசாயிகளுக்கு வீட்டுத்தோட்டத்திற்கான விதையினங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், ரொட்டை-ஹிஜ்ரா கிராமத்தின் 53 விவசாயிகளுக்கு விவசாய திணைக்களத்தின் மூலம் 53 மண்வெட்டிகளும், 40 விவசாயிகளுக்கு கமநல சேவை நிலையங்களினூடாக ஊடாக…
மேலும் படிக்க

நான்கு பிராந்தியங்களில் 1500 பயனாளிகளுக்கு 4500 பழ மரக்கன்றுகள்

CA , NCA ஆகிய நிறுவனங்களின் 420,000.00 ரூபாய் நிதி உதவியுடன் பொத்துவில், திருக்கோவில், சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய நான்கு pரதேசங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 27 கிராமக்கிளைகளின் 1500 பயனாளிகளுக்கு மா, பலா, தென்னை, கொய்யா ஆகிய மரக்கன்றுகள் உள்ளடங்களாக ஒரு பயனாளிக்கு 3 கன்றுகள் வீதம் 4500 பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளியில் 300 விவசாயிகளுக்கான பயிற்சிகள் மற்றும் உபகரண உதவிகள்.

CA அமைப்பின் நிதி உதவியுடன் வீட்டுத்தோட்டம், நெற் செய்கையில் ஈடுபடும் 300 விவசாயிகளுக்கு இயற்கைமுறை விவசாயம் தொடர்பாக 95,000.00 ரூபாய் செலவில் 10 பயிற்சிகள் நடாத்தப்பட்டுள்ளதுடன், கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 4 பயனாளிகளுக்கு 160,000.00 ரூபாய் செலவில் தொழிநுட்ப உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது
மேலும் படிக்க

கல்முனையில் விதை நெல் மற்றும் நெசவுத் தொழிலுக்கு நிதி உதவி

CA அமைப்பின் நிதி உதவியுடன் சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய இரு பிரதேசங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 4 விவசாயிகளுக்கு விதை நெல் உற்பத்திக்காக ஒருவருக்கு 30,000.00 வீதம் 4 பயனாளிகளுக்கும் 120,000.00 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதுடன், கல்முனை பிரதேச பாண்டிருப்பு கிளையில் 6 பேரைக் கொண்ட சுய உதவிக்குழு ஒன்றிற்கு நெசவுத் தொழில் செய்வதற்காக ரூபாய் 343,000.00 நிதி உதவியும் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

Oxfam நிதியுதவியுடன் கூடிய அரிசி சேகரிப்பு நிலையம் தம்பத்தை கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது

Oxfam நிறுவனத்தின் நிதி உதவியுடன் தம்பட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டஇந் நெற்களஞ்சிய சாலையானது 2009.01.20ம் திகதி அம்பாறை மாவட்ட அரச அதிபர் திரு சுனில் கன்னங்கரா அவர்கள் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
மேலும் படிக்க