சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

உட்கட்டமைப்பு அபிவிருத்தி

திட்ட விரிவாக்கம் பற்றி விவாதிக்க ASI ஒருங்கிணைப்பாளர் WORD க்கு வருகை தந்தார்

இலங்கையில் நிலையான நிர்மாணக் கட்டமைப்பை உருவாக்கும் அலையன்ஸ் ஃபார் சஸ்டைனபிள் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (ஏஎஸ்ஐ) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.சமந்த அபேவிக்ரம அவர்கள் இன்று 21.11.2023 அன்று SWOAD க்கு விஜயம் செய்து இந்தக் கட்டமைப்பின் விரிவாக்கம் குறித்து விவாதித்தார். இந்நிகழ்வில், SWOAD அமைப்பின் ஸ்தாபகர் திரு.எஸ்.செந்துராசா, நிர்வாக சபை உறுப்பினர்கள், தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி எஸ்.அனுசியா, திருக்கோவில் வலய ஓய்வுபெற்ற மேலதிக கல்விப் பணிப்பாளர் கே.கமலதேவி, தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர். எஸ்.குணபாலன், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜி.விநாயகமூர்த்தி […]
மேலும் படிக்க

சாகாமம் பிரதேசத்தில் 240 குடும்பங்களுக்கு குராய் குடிநீர் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

EU-ACAP திட்டத்தின் கீழ் சாகாமம் பிரதேசத்தில் 240 குடும்பங்களுக்கு குலாய் குடிநீர் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

EU-ACAP திட்டத்தின் கீழ் தங்கவேலாயுதபுரம் கிராம சாலை கட்டுமானம்

2012.05.09ம் திகதி EU-ACAP திட்டத்தின் கீழ் தங்கவேலாயுதபுரம் கிராம வீதி கட்டுமாணப்பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.  
மேலும் படிக்க

காவல்துறை மகளிர் மேசை அடிக்கல் நாட்டு விழா மற்றும் விநாயகபுரம் கல்வெட்டு நிகழ்வு

EU-ACAP திட்டத்தின் கீழ் 17.10.2012ம் திகதி திருக்கோவில் பொலிஸ் Women desk அடிக்கல் நாட்டல் நிகழ்வும், வினாயகபுரம் கல்வெட்டு திறப்புவிழாவும் நடைபெற்றது.
மேலும் படிக்க

விவசாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேசத்தில் மாதிரி பண்ணை ஆரம்பிக்கப்பட்டது

விவசாயபெறுமதிசேர் மேம்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளிப் பிரதேசத்தில் விவசாய மாதிரிப் பண்ணை ஒன்று அமைக்கப்பட்டு 23.11.2012ம் திகதி திறப்பு விழா மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க

CA அமைப்பு ஆலையடிவேம்பில் 24 பேருக்கும் கல்முனையில் 42 பேருக்கும் தற்காலிக தங்குமிடங்களை அமைத்துள்ளது.

வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் CA அமைப்பின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 24 பேருக்கும், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 42 பேருக்கும் தற்காலிக கொட்டில் அமைத்துக் கொடுக்கப்பட்டது
மேலும் படிக்க

Oxfam நிதியுதவியுடன் கூடிய அரிசி சேகரிப்பு நிலையம் தம்பத்தை கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது

Oxfam நிறுவனத்தின் நிதி உதவியுடன் தம்பட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டஇந் நெற்களஞ்சிய சாலையானது 2009.01.20ம் திகதி அம்பாறை மாவட்ட அரச அதிபர் திரு சுனில் கன்னங்கரா அவர்கள் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
மேலும் படிக்க

DA அமைப்பு பல்வேறு பகுதிகளில் 10 தண்ணீர் தொட்டிகளுக்கு நிதியளிக்கிறது

DA நிறுவனத்தின் 5,30,000.00 ரூபாய் நிதியுதவியுடன் பொத்துவில் பிரதேசத்தில் 2 நீர் தாங்கிகளும், திருக்கோவில் பிரதேசத்தில் 3 நீர்தாங்கிகளும், நாவிதன்வெளிப் பிரதேசத்தில் 3 நீர்தாங்கிகளும், சம்மாந்துறை பிரதேச வளத்தாப்பிட்டிக் கிராமத்தில் 1, கல்முனை பிரதேச துரவந்தியமேடு கிராமத்தில் 1 தாங்கியுமாக 10 நீர்த்தாங்கிகள் அமைத்து வழங்கப்பட்டன.
மேலும் படிக்க

சுகாதாரம் மற்றும் நீர் திட்டங்கள்: 2008 இல் அணுகல் மற்றும் வசதிகளை மேம்படுத்துதல்.

2008ம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட சமூக புனர்வாழ்வு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் DCA/FCA நிறுவனத்தின் 2,840,000.00 ரூபாய் நிதியுதவியுடன் நாவிதன்வெளிப் பிரதேசத்தில் 20 மலகூடங்களுக்கும், 20 கிணறுகளும், Neccdep நிறுவனத்தின் 1,703,000.00 ரூபாய் செலவில் சின்னப்பனங்காடு, தம்பட்டை-01, தம்பிலுவில்-02, வினாயகபுரம்-02 ஆகிய கிராமங்களில் 4 பொதுக்கிணறுகளும், மலகூடங்களும் அமைக்கப்பட்டுள்ளதோடு. சங்கமங்கிராமத்தில் 573,500.00 ரூபாய் செலவில் மலசலகூடம் ஒன்றும் அதற்கான சுற்றுவேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

சம்மாந்துறையில் 20 வீடுகளும் நாவிதன்வெளியில் 19 வீடுகளும் ஒருங்கிணைக்கப்பட்ட சமூக புனர்வாழ்வு அபிவிருத்தி செயற்திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட சமூக புனர்வாழ்வு அபிவிருத்தி செயல் திட்டத்தின் கீழ் CA நிறுவனத்தின் 19,600,000/= நிதியுதவியுடன் சம்மாந்துறை பிரதேசத்தில் 20 நிரந்தர வீட்டுகளும், நாவிதன்வெளிப் பிரதேசத்தில் 19 வீடுகளும் அமைக்கப்பட்டதோடு புனரமைப்பு வீட்டுத்திட்டத்திற்காக 85 பயனாளிகள் நாவிதன்வெளிப் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டு DCA / FCA நிறுவனங்களின் 25,625,000/= நிதி உதவியுடன் இவ்வீடுகள் புனரமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.
மேலும் படிக்க