சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

இளைஞர் அபிவிருத்தி

எதிர்காலத்தில் தொழில் நிமிர்த்தம் வெளிநாடு செல்லவுள்ள மாணவர்களுக்கு HIV/AIDS விழிப்புணர்வு கருத்தரங்கு

SWOAD நிறுவனமானது CDS நிறுவனத்தின் உதவியுடன் வெளிநாடு செல்லவிருக்கின்ற தொழில் பயிற்சியை தொடர்கின்ற மாணவர்களுக்கு HIV/AIDS தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த 16.011.2023ம் திகதி நடாத்தப்பட்டது. இக்கருத்தரங்கானது காரைதீவு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் பயிற்சியை தொடர்கின்ற 40மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு கருத்தரங்கை பயிற்சி பெற்ற வளதாரிகளான க.பிறேமலதன் மற்றும் ஆனந்தராசா அவர்களினால் நடாத்தப்பட்டது.
மேலும் படிக்க

சுவாட்‌ நிறுவனத்தில்‌ தொழில்‌ வாய்ப்பினை ஏற்படுத்திக்‌ கொடுப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும்‌ நிகழ்வு

அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு (SWOAD ) அமைப்பானது கனேடிய உலகப்பல்கலைக்கழக (WUSC ) நிறுவனத்தின்‌ உதவியுடன்‌ அம்பாறை மாவட்டத்தில்‌ இளைஞர்‌. யுவதிகளுக்கு சுற்றுலாத்‌துறையில்‌ உள்ள தொழில்‌ வெற்றிடங்களுக்கு தொழில்‌ பயிற்சி நெறிகளை வழங்கி அதன்‌ ஊடாக (வேலைவாய்ப்பினை சுற்றுலாத்‌ துறைகளில்‌ (Tourism ). பெற்றுக்‌ கொடுக்கும்‌ முகமாக SWOAD நிறுவனம்‌ கனேடிய உலகப்பல்கலைக்கழகம்‌ (WUSC ) மற்றும்‌ அறுகம்பை சுற்றுலாத்துறை சம்மேளனத்துடன்‌ ABTA ஒப்பந்தம்‌ ஒன்றை கைச்சாத்திடும்‌ நிகழ்வு…
மேலும் படிக்க

WUSC நாட்டின் இயக்குநரின் வருகை

17.10.2012ம் திகதி WUSC Country Director வருகைதந்து இத்திட்ட செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டு மீளாய்வு செய்யப்பட்டது.
மேலும் படிக்க

வீடியோ ஆவணப்படுத்தல் மூலம் இளைஞர்களின் சமூக-நிலை மாற்றங்களைப் படம்பிடித்தல்.

இளையோர் நிலைமாற்றல் செயல்திட்டத்தினால் சமூகமட்ட இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ளமாற்றங்கள் குறித்த 11.05.2011ம் திகதி கொழும்பு WUSC தலைமை அலுவலகத்திலிருந்து Gender Officer வருகைதந்து Video Document மூலம் தகவல்களை பெற்று ஆய்வினை மேற்கொண்டார்.
மேலும் படிக்க

தம்பட்டையில் மறு ஒருங்கிணைப்பு மற்றும் அனுபவப் பரிமாற்றம்.

இளைஞர்களின் நிலைமாற்றல் செயற்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட இளைஞர், யுவதிகள் அனைவரினது மீள் ஒருங்கிணைப்பு நிகழ்வானது அவர்களின் கருத்துப்பரிமாறல்கள், அனுபவப் பகிர்வுகளுடன் 2011/06/05,06ம் திகதி தம்பட்டை சுவாட் பயிற்சி நிலையத்தில் நடாத்தப்பட்டது. இன் நிகழ்வினை சிறப்பிற்கும் முகமாக இளைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டதுடன், இதில் WUSC, UNICEF, ILO and Save the children பிரதிநிதிகளும், அரச சார்பற்ற ஏனைய அமைப்புக்களின் பிரதிநிதிகளும், இப்பயிற்சியினை நடாத்திய வளவாளர்களும் கலந்து இந்நிகழ்வினை சிறப்பித்துள்ளனர்.
மேலும் படிக்க

யுத்தம் மற்றும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கான வாழ்க்கைத் திறன் மற்றும் அபிவிருத்திப் பட்டறைகள்.

அம்பாறை மாவட்டத்தில் யுத்தசூழல், அனர்த்தங்களின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளை இலக்காகக் கொண்டு;, இளையோர்களுக்கு வாழ்க்கை தொடர்பான உள்ளுணர்வினை ஏற்படுத்தி, சமூகத்துடன் மீள இணைவதற்கும், கல்வி, பொருளாதாரத்தில் மேம்பாட்டை அடையும் பொருட்டும், தொழில் திறனை விருத்தி செய்து வாழ்க்கைத் தெரிவுகளை திட்டமிட்டு செயற்படுத்தக்கூடிய வகையில் இளைஞர்களிடையே நிலைமாற்றத்தினை ஏற்படுத்தும் பொருட்டு WUSC and UNICEF அமைப்புக்களின் நிதி உதவியுடன் இளைஞர்களின் நிலைமாற்றல் செயற்திட்டத்தின்…
மேலும் படிக்க

தொழில் பயிற்சி பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகள் குறித்து வழிகாட்ட வங்கிக் கடன் உதவித் திட்டம் குறித்த கலந்துரையாடல்.

தொழில் பயிற்சி நெறியினை முடித்துக்கொண்ட மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பிற்கான வழிகாட்டல் வழங்குவதை நோக்காகக் கொண்டு வங்கி முகாமையாளர்களை அழைத்து வங்கிக் கடன் உதவித் திட்டம் தொடர்பான நடைமுறைகள் குறித்து 24.05.2011ம் திகதி சுவாட் தலைமையலுவலக பயிற்சி மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டது.
மேலும் படிக்க

இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளன.

தொழில் பயிற்சி வழங்கல் செயல் திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு, திருக்கோவில், கல்முனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 105 இளைஞர், யுவதிகளுக்கு ODW/UNICEF ஆகிய நிறுவனங்களின் அணுசரனையுடன் அழகுக்கலை, மின்னினைப்பு, தையல், சாரதி, குளிரூட்டி திருத்துனர் பயிற்சி போன்ற தொழில் பயிற்சிகள் நடாத்தப்பட்டதோடு, பயிற்சிகளை முடித்துக்கொண்ட பயிலுனர்களுக்கான NVQ தரத்திலான சான்றிதழ்களும், தொழிலை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

கல்வி உதவித் திட்டத்தில் 150 A/L மாணவர்களுக்கு 7 பிரிவுகளில் 12 மாதங்களுக்கு மாதம் 75,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

கல்வி உபகார நிதி வழங்கல் செயற்பாட்டின் கீழ் பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு ஆகிய 7 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், தெரிவு நிபந்தனையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 150 உயர்தர மாணவர்களுக்கு கல்வி உபகார நிதியாக மாதாந்தம் 75,000/= வீதம் 12 மாதங்களுக்கும் 900,000/= வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புகள்

கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2008ம் ஆண்டில் கா.பொ.த சாதாரணதர, உயர்தர மாணவர்களுக்கான மீட்டல் வகுப்பானது DCA, Diakonia நிறுவனத்தின் நிதியுதவியுடன் 493,000.00 ரூபாய் செலவில் திருக்கோவில், நாவிதன்வெளி, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் நடாத்தப்பட்டது. இதில் 611 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க