சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

SWOAD

81 இளம் பெண்களுக்கு தையல் தொழில் தொடங்குவதற்கு வசதியாக கடன் வழங்கப்பட்டது

2006ம் ஆண்டு வாழ்வாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு கோமாரி, விநாயகபுரம், வளத்தாப்பிட்டி ஆகிய கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 81 யுவதிகளை உள்ளிணைத்து தையல் கூடம் அமைக்கப்பட்டு தொழிலுக்கான தையல் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கடனுதவியாக 800,000.00 ரூபாய் சுவாட் அமைப்பினால் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

சுனாமி மற்றும் போர் தாக்கத்திற்கு பிறகு வாழ்வாதாரத்தை உயர்த்துதல்

2006ம் ஆண்டு காரைதீவு, சம்மாந்துறைப் பிரதேசங்களில் சுனாமி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களின் வாழ்கைத்தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு 345 பேருக்கு தொழில் மேம்பாட்டுக்கான தொழில் உபகரணங்கள் Goal நிறுவன நிதி உதவியுடன் SWOAD அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் படிக்க

தொழில்துறை உபகரணங்கள் விநியோகம் மூலம் சமூகங்களை மேம்படுத்துதல்

2006ம் ஆண்டு சுனாமியால் தொழில் பாதிக்கப்பட்ட பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, கல்முனை ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்ப்பட்ட 287 பேருக்கு 18 இலட்சம் ரூபா பெறுமதியான தொழிலுபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் படிக்க

Fit / CIDA ஆதரவுடன் SWOAD அமைப்பினால் சர்வதேச குழந்தைகள் தினக் கொண்டாட்டம்

சர்வதேச சிறுவர் தினமானது 2006.10.08ம் திகதி ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் Fit / CIDA நிறுவனத்தின் நிதி உதவியுடன் சுவாட் அமைப்பினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் சிறுவர் உரிமைச் செயற்றிட்டத்தில் உள்ளடங்கும் 08 கிராமங்களைச் சேர்ந்த 480 சிறுவர்களும், SWOAD அமைப்பின் இணைப்பாளர், பணியாளர்களும் அரச, அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் படிக்க

திருக்கோவிலில் சர்வதேச மகளிர் தின விழா

திருக்கோவில் பிரதேசத்தில் சர்வதேச மகளீர் தினம் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் 2006.03.12 ம் திகதி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் 700 – 800 அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர். அத்தோடு குழுத்தலைவிகளும், அதிக சேமிப்புள்ள அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் படிக்க

விரிவான தொழிற்பயிற்சி முயற்சிகள்: WUSC மற்றும் ILO ஆதரவுடன் எதிர்காலத்தை உருவாக்குதல்

தொழில் பயிற்சி வழங்கல் செயற்திட்டத்தின் கீழ் WUSC அமைப்பின் நிதி உதவியுடன் பயிற்சிக்கான கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதோடு, மோட்டார் சைக்கிள்; திருத்தும் பயிற்சி, மின்னிணைப்பு, தச்சுப் பயிற்சி, ஆகிய பயிற்சி நெறிகளும், ILO அமைப்பின் நிதி உதவியுடன் சாரதி பயிற்சி நெறிகளும் நடாத்தப்பட்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கான நிவார உதவித்திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

முதியோர்களுக்கு தொழில் மேம்பாட்டுகான கடனுதவிகளும், வைத்திய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன

ஒதுக்கப்பட்ட முதியோரின் வாழ்க்கையில் புத்தொழியூட்டும் நோக்கில் Helpage நிறுவனத்தின் நிதி உதவியுடன் சிறுகைத்தொழில்களை மேற்கொள்ளும் முதியோர்களுக்கு தொழில் மேம்பாட்டுகான கடனுதவிகளும், வைத்திய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.  
மேலும் படிக்க

சிறுவர்களுக்கு பாடசாலை சீருடைத்துணி, கற்கை உபகரணங்களடங்கிய பொதிகள் 600 வழங்கப்பட்டது.

சிவசரிட்டி (Sivacharity) நிறுவனத்தின் 8 இலட்சம் ரூபா செலவில் 5 முன்பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர் பாதுகாப்பு இலங்கை அமைப்பின் ; (SCiSL) 70,000.00 ரூபா செலவில் 3 தற்காலிக பாலர் பாடசாலைகள் திருக்கோவில், காரைதீவுப் பிரதேசங்களிலும், GVCஅமைப்பினால் கல்முனைப் பிரதேசத்தில் 2 பாலர் பாடசாலைகளும், உலக கனேடிய பல்கலைக்கழக (WUSC) நிறுவனத்தின் 275,000.00 ரூபா செலவில் 8 பாலர் பாடசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. CIDA – Fit நிறுவனம் நலன்புரி நிலையங்களிலுள்ள…
மேலும் படிக்க