உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும்முகமாக Diakonia திட்டத்தின் கீழ் சுய சார்புக் குழுக்களுடைய உற்பத்திப்பொருட்களின் விற்பனை நிலையமானது கல்முனை, திருக்கோவில் பிரதேசங்களில் 15,16.02.2012ம் திகதி காலை 11.00 மணிக்கு பிரதேச நிர்வாக உத்தியோகத்தர்களின் தலைமையில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கஞ்சிகுடியாறு, தாண்டியடி, வினாயகபுரம் -1,2,3,4, தங்கவேலாயுதபுரம், காஞ்சிடங்குடா, சிறிவள்ளிபுரம், குடிநிலம், சாகாமம் ஆகிய 11 கிராம சேவர் பிரிவுகளில் இருந்தும் தேசிய அடையாள அட்டை, பிறப்பு பதிவு, மரண பதிவு போன்ற ஆவணங்கள் இல்லாதோர் 560பேர் இனங்காணப்பட்டு NRC ஊடாக அவர்களுக்கான ஆவணங்கள் பெற்றுகொடுக்கப்பட்டுள்ளன.
EU-ACAP திட்டத்தின் கீழ் தாண்டியடி, சிறிவல்லிபுரம், விநாயகபுரம், குடிநிலம் ஆகிய கிராமங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வூட்டும் பொருட்டு வீதி நாடகம் நடாத்தப்பட்டுள்ளது.
EU-ACAP திட்டத்தின் கீழ் 17.10.2012ம் திகதி திருக்கோவில் பொலிஸ் Women desk அடிக்கல் நாட்டல் நிகழ்வும், வினாயகபுரம் கல்வெட்டு திறப்புவிழாவும் நடைபெற்றது.
இளையோர் நிலைமாற்றல் செயல்திட்டத்தினால் சமூகமட்ட இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ளமாற்றங்கள் குறித்த 11.05.2011ம் திகதி கொழும்பு WUSC தலைமை அலுவலகத்திலிருந்து Gender Officer வருகைதந்து Video Document மூலம் தகவல்களை பெற்று ஆய்வினை மேற்கொண்டார்.
இளைஞர்களின் நிலைமாற்றல் செயற்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட இளைஞர், யுவதிகள் அனைவரினது மீள் ஒருங்கிணைப்பு நிகழ்வானது அவர்களின் கருத்துப்பரிமாறல்கள், அனுபவப் பகிர்வுகளுடன் 2011/06/05,06ம் திகதி தம்பட்டை சுவாட் பயிற்சி நிலையத்தில் நடாத்தப்பட்டது. இன் நிகழ்வினை சிறப்பிற்கும் முகமாக இளைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டதுடன், இதில் WUSC, UNICEF, ILO and Save the children பிரதிநிதிகளும், அரச சார்பற்ற ஏனைய அமைப்புக்களின் பிரதிநிதிகளும், இப்பயிற்சியினை நடாத்திய வளவாளர்களும் கலந்து இந்நிகழ்வினை சிறப்பித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் யுத்தசூழல், அனர்த்தங்களின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளை இலக்காகக் கொண்டு;, இளையோர்களுக்கு வாழ்க்கை தொடர்பான உள்ளுணர்வினை ஏற்படுத்தி, சமூகத்துடன் மீள இணைவதற்கும், கல்வி, பொருளாதாரத்தில் மேம்பாட்டை அடையும் பொருட்டும், தொழில் திறனை விருத்தி செய்து வாழ்க்கைத் தெரிவுகளை திட்டமிட்டு செயற்படுத்தக்கூடிய வகையில் இளைஞர்களிடையே நிலைமாற்றத்தினை ஏற்படுத்தும் பொருட்டு WUSC and UNICEF அமைப்புக்களின் நிதி உதவியுடன் இளைஞர்களின் நிலைமாற்றல் செயற்திட்டத்தின்…