சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

SWOAD

யுத்தம் மற்றும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கான வாழ்க்கைத் திறன் மற்றும் அபிவிருத்திப் பட்டறைகள்.

அம்பாறை மாவட்டத்தில் யுத்தசூழல், அனர்த்தங்களின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளை இலக்காகக் கொண்டு;, இளையோர்களுக்கு வாழ்க்கை தொடர்பான உள்ளுணர்வினை ஏற்படுத்தி, சமூகத்துடன் மீள இணைவதற்கும், கல்வி, பொருளாதாரத்தில் மேம்பாட்டை அடையும் பொருட்டும், தொழில் திறனை விருத்தி செய்து வாழ்க்கைத் தெரிவுகளை திட்டமிட்டு செயற்படுத்தக்கூடிய வகையில் இளைஞர்களிடையே நிலைமாற்றத்தினை ஏற்படுத்தும் பொருட்டு WUSC and UNICEF அமைப்புக்களின் நிதி உதவியுடன் இளைஞர்களின் நிலைமாற்றல் செயற்திட்டத்தின்…
மேலும் படிக்க

தொழில் பயிற்சி பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகள் குறித்து வழிகாட்ட வங்கிக் கடன் உதவித் திட்டம் குறித்த கலந்துரையாடல்.

தொழில் பயிற்சி நெறியினை முடித்துக்கொண்ட மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பிற்கான வழிகாட்டல் வழங்குவதை நோக்காகக் கொண்டு வங்கி முகாமையாளர்களை அழைத்து வங்கிக் கடன் உதவித் திட்டம் தொடர்பான நடைமுறைகள் குறித்து 24.05.2011ம் திகதி சுவாட் தலைமையலுவலக பயிற்சி மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டது.
மேலும் படிக்க

இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளன.

தொழில் பயிற்சி வழங்கல் செயல் திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு, திருக்கோவில், கல்முனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 105 இளைஞர், யுவதிகளுக்கு ODW/UNICEF ஆகிய நிறுவனங்களின் அணுசரனையுடன் அழகுக்கலை, மின்னினைப்பு, தையல், சாரதி, குளிரூட்டி திருத்துனர் பயிற்சி போன்ற தொழில் பயிற்சிகள் நடாத்தப்பட்டதோடு, பயிற்சிகளை முடித்துக்கொண்ட பயிலுனர்களுக்கான NVQ தரத்திலான சான்றிதழ்களும், தொழிலை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

5 பிராந்தியங்களில் உள்ள 500 விவசாயிகள் விதைகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய வழிகாட்டுதலைப் பெறுகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் 5 பிரதேசத்திலுமுள்ள, 500 விவசாயிகளுக்கு மரக்கறி விதையினங்களும், பழமரக்கன்றுகளும் வழங்கப்பட்டுள்ளதோடு விவசாய போதனாசிரியர் ஊடாக அவற்றை நடுவதற்கும் பராமரிப்பதற்குமான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

விவசாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேசத்தில் மாதிரி பண்ணை ஆரம்பிக்கப்பட்டது

விவசாயபெறுமதிசேர் மேம்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளிப் பிரதேசத்தில் விவசாய மாதிரிப் பண்ணை ஒன்று அமைக்கப்பட்டு 23.11.2012ம் திகதி திறப்பு விழா மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க

அறுவடைக்குப் பிந்தைய கையாளுதல் மற்றும் தரப்படுத்தல் குறித்த பயிற்சி

நாவிதன்வெளி,சம்மாந்துறை, ஆலயடிவேம்பு, பொத்துவில், உகனை ஆகிய பிரதேசங்களில் உள்ள 17 விவசாய சங்கங்களில் உள்ள 30பேர் வீதம் தெரிவு செய்யப்பட்ட 503 விவசாயிகளுக்கு விவசாய உத்தியோகத்தர்களைக் கொண்டு அந்தந்த கிராமங்களில் post harvest handling and grading on vegetable பயிற்சியானது நடாத்தப்பட்டது.  
மேலும் படிக்க

வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்த மண்டல அளவிலான விவாதம்

விவசாயபெறுமதிசேர் மேம்பாட்டு செயற்திட்டம் அமுல்படுத்தல் தொடர்பான பிரதேசமட்ட விரிவுரையாக்கக் கலந்துரையாடலானது தெரிவு செய்யப்பட்ட நாவிதன்வெளி, உகண, சம்மாந்துறை, பொத்துவில், ஆலையடிவேம்பு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள பிரதேச செயலகத்தில்; நடாத்தப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர், கிராம சேவகர், சமூர்த்தி உத்தியோகத்தர், விவசாய போதனாசிரியர்கள், விவசாயசங்கத் தலைவர்கள், பெரும்பாக உத்தியோகத்தர், சுனுளு, பிரதேச சபை உறுப்பினர்கள், நில அளவையாளர் உற்பட 146பேர் கலந்து கொண்டு இத்திட்டச் செயற்பாடு பற்றிய…
மேலும் படிக்க

விவசாய வருமான மேம்பாடு மற்றும் விவசாயிகளின் திறன்களுக்கான பயிற்சி

விவசாய சங்கங்களை வலுப்படுத்தி, விவசாயிகளின் அறிவு, திறன் மற்றும் தொழில் நுட்பத்தினை விருத்தி செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து பொருளாதார மேம்பாட்டை அடையும் பொருட்டு லுத்தரன் உலக நிவாரண (LWR) அமைப்பின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விவசாயபெறுமதிசேர் மேம்பாட்டு செயற்திட்டம் அமைப்பினால் இத்திட்ட அமுல்படுத்தல் தொடர்பான மாவட்டமட்ட விரிவுரையாக்கக் கலந்துரையாடலானது 12.06.2011ம் திகதி அம்பாறை, மாவட்ட அரச அதிபர் காரியாலயத்தில், திரு.சுணில்கன்னங்கரா (GA) அவர்களின் தலைமையில் அமைப்பினால் நடாத்தப்பட்டது.…
மேலும் படிக்க

CA அமைப்பு ஆலையடிவேம்பில் 24 பேருக்கும் கல்முனையில் 42 பேருக்கும் தற்காலிக தங்குமிடங்களை அமைத்துள்ளது.

வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் CA அமைப்பின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 24 பேருக்கும், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 42 பேருக்கும் தற்காலிக கொட்டில் அமைத்துக் கொடுக்கப்பட்டது
மேலும் படிக்க

CA அமைப்பு கல்முனையில் வீட்டுத்தோட்டம் மற்றும் மட்பாண்ட தொழில்துறைக்கு 400,000.00 ரூபாவை வழங்குகிறது.

வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் CA அமைப்பின் அனுசரணையுடன் கல்முனை பிரதேசத்தில் இருந்து வீட்டுத் தோட்டத்திற்காக 50 பயனாளிகளும், மட்பாண்ட கைத்தொழிலுக்காக 15 பயனாளிகளும் தொழிலுக்கான உதவித் தொகையாக 400,000.00 ரூபாய் நிதியானது திட்ட உத்தியோகத்தர் அவர்களின் தலைமையில் இப்பிரதேச செயலாளர் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க