அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை கிராம மட்டத்தில் செயற்படுத்துவதிலும், மக்களை அணிதிரட்டுவதிலும் காணப்படும் சவால்கள் குறித்தும், அவற்றுக்கான மாற்று உபாயத்திட்டங்கள் குறித்த திட்டமிடல் கலந்துரையாடலானது 24.04.2026ம் திகதி வெள்ளிக்கிழமை சுவாட் தலைமையலுவலகத்தில் அமைப்பின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு. ச.செந்துராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தலைமையலுவலக பணியாளர்கள் மற்றும் பிரதேச முகாமையாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.


